மன்னார் மடுப் பகுதியை கத்தோலிக்கர்களின் புனித பூமியாக அறிவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
மன்னார் மடுமாதா ஆலயம் அமைந்துள்ள மடுப்பகுதியினை கத்தோலிக்கர்களின் புனிதபூமியாக அறிவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்தார்.அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மடுப்பிரதேசம் புனித பூமியாக அரசிதழ் ஊடாக அறிவிக்கப்படும்.
அதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஞாயிற்றுக்கிழமை மடுமாதா ஆலயத்ததுக்குப் பயணம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.