கண்டிக் கலவரத்தின் போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின ரால் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக் கப்படும் விசாரணைக ளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இராணுவக் கோப்ரல்கள் இருவரே கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இருவரும் தடுத்துவைக் கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
