சட்டத்திற்குப் புறம்பாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து உங்களை நீக்கினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனநாயக விழுமியங்களுக்கு முரணாக இருவேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்குமாறாக என்னைக் கட்சியிலிருந்து நீக்கினால் நான் நீதிமன்றத்தை நாடுவேன்.
ரெலோ அமைப்பின் கடந்த அமர்வின்போது அமைச்சர் டெனீஸ்வரைப் பதவி விலகுமாறு கட்சி வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் டெனீஸ்வரன் தானாக பதவி விலகப்போவதில்லையெனவும், தேவையானால் கட்சி தன்னை விலக்குவதாக இருந்தால் விலக்கட்டும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நாளை அமைச்சர் டெனீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.