இந்திய இராணுவ அதிகாரியின் கல்லறையை 30 வருடங்களின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பு செய்வதில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோப்பாய் தெற்குப் பகுதியில் இந்திய இராணு அதிகாரியின் கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறையை புனரப்பதில் 50 இற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.
டந்த 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதிலின் போது, கோப்பாய் தெற்கு இராஜவீதியில் உள்ள வெள்ள வாய்கால் பிராயடி பகுதிக்கு அண்மித்த பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாமில் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவரே கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரின் நினைவாக அந்த இடத்தில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் இதுவரை காலமும் குறித்த கல்லறை கவனிப்பாரற்று இருந்தது.
இன்றைய தினம் குறித்த கல்லறையை இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் இதனையடுத்து அந்தப்பகுதிக்கு யாரையும் செல்வதற்கு இலங்கை இராணுவத்தினர் அனுமதி மறுத்துவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன