எதிர்வரும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக அறிவுரையொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏழு மாகாணங்களுக்கான ஆட்சிக் காலம் நிறைவடைந்து ஆளுநரின் கட்டுப்பாட்டில் குறித்த மாகாணங்கள் செயற்பட்டு வருகின்றன. ஏனைய இரண்டு மாகாணங்களுக்கான ஆட்சிக் காலமும் விரைவில் நிறைவடையவுள்ளன.
இந்நிலையில், மாகாண சபைத் தேர்ததலை நடத்துவது தொடர்பாக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.