Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவிய, இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள இலங்கையர்கள் இருவரை ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு இன்று (24)  அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் சென்று இறங்கியதாக ராமேஸ்வரம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மரைன் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது இலங்கையை சேர்ந்த இருவர் வந்திருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டாலை, ம்பகா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30, 31 வயதுகளையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் நேற்று (23) இரவு  மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து 3 லட்சம் பணம் கொடுத்து படகு ஒன்றில்  புறப்பட்டு இன்று (24) அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் சென்று இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும், ஐஸ், ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல, நிலுவையில் உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக மறைந்திருப்பதற்காக இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என மரைன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட இருவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையர்கள் இருவர் மீதும், மரைன்  பொலிஸார், சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டின்றி தமிழகத்துக்கு ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்து, புழல் சிறையில்  அடைக்க நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில்,  கியூ பிரிவு பொலிஸார், கைதான இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கையில் நிலுவையில் உள்ளதால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது என தீர்மானித்துள்ளனர். 

இதனால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதியில் நேற்று (23) தொடங்கிய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று (24) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள குறித்த இருவரும்   சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுறுவிய சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, மக்கள் நலன் பேசுகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

Next Post

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

Next Post
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, மக்கள் நலன் பேசுகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நான் பதவி விலக போவதில்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் தெரிவிப்பு

July 24, 2026

Recent News

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, மக்கள் நலன் பேசுகின்றனர் | அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நான் பதவி விலக போவதில்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் தெரிவிப்பு

July 24, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures