கடற்கரையில் திடீரென தோன்றிய மெகா சைஸ் பனிக்கட்டி உருண்டைகள்

கடற்கரையில் திடீரென தோன்றிய மெகா சைஸ் பனிக்கட்டி உருண்டைகள்

சைபீரியா கடற்கரையில் திடீரென மெகா சைஸ் பனிக்கட்டி உருண்டைகள் தோன்றியுள்ளது. வடமேற்கு சைபீரியாவின் ஒபி வளைகுடா கடற்பகுதி மிகவும் இயற்கை எழில் வாய்ந்த கடற்கரையாகும்.

இங்கு கடற்கரைக்கு அண்மித்துள்ள கிராம மக்கள் மாத்திரமின்ற அதிகளாவு சுற்றுலாப்பயணிகளும் அழகை ரசிப்பதற்காக இங்கே செல்வது வழமையாகும். இந்நிலையில் காலைநேரம் கடற்கரைக்கு சென்ற மக்கள் அங்கு காணப்பட்ட பெரிய பனிக்கட்டி உருண்டைகளை கண்டு ஆச்சரியமைந்துள்ளதுடன் அதனை தொட்டு பார்க்கவே அச்சப்பட்டனர்.

டென்னிஸ் பந்து அளவிலிருந்து ஒரு மீட்டர் வரை அந்த பனிக்கட்டி உருளைகள் காணப்பட்டதாகவும். கடற்கரை முழுவதும் 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுக்கி வைத்ததுபோல் காணப்பட்ட பனிக்கட்டி பந்துகளை மக்கள் வியப்புடன் பார்த்துச்சென்றுள்ளனர். கடற்கரையை அண்மித்து வாழும் மக்கள் தங்கள் வாழ்நாளில் அப்படிப்பட்ட பனிக்கட்டி உருண்டைகளை பார்த்ததே இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் கடலின் மேற்பரப்பில் உருவான பனிக்கட்டிகள் காற்று மற்றும் அலையின் வேகத்தால் பனிக்கட்டி பந்துகள் போல் உருவாகியுள்ளதாக சுற்றுசூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News