வவுனியாவில் பிற்பகல் 5.30மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு செல்லும் இ. போ. ச. பேருந்தில் 4கிலோ 25கிராமுடைய கேரளா கஞ்சாவினை எடுத்துச் சென்ற முகமட் அஸ்வர் 29வயதுடைய மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த நபரைக் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டபோது கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலசார் மேலும் தெரிவித்துள்ளனர்.