Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

August 16, 2016
in News, Sports
0

ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

j

ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார்.

எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ் டிரோ, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக கருதப்பட்டவர்.

ஆனால் துருதிர்ஷ்டம் அவரைத் துரத்தியது. 17 பேர் ஓடிய அந்தப் பந்தயத்தில் இரண்டரை லேப்கள் மீதம் இருந்த நிலையில், ஓடுதளத்தில் தண்ணீர் இருந்த காரணத்தால் சக போட்டியாளர் ஒருவர் கால் இடறி கீழே விழுந்தார்.

கீழே விழுந்த அவர் டிரோவின் காலில் மோதினார். இந்த மோதலில் இன்னொரு வீராங்கனையும் கீழே விழுந்தார்.

கீழே விழுந்த இரு வீராங்கனைகளும் எழுந்த ஓடத் தொடங்கினார். ஆனால் கீழே விழாத டிரோவுக்கு பிரச்னை தனது காலணியின் வாயிலாக எழுந்தது.

அந்த வீராங்கனை டிப்ரோவின் கால் மீது விழ, அவரது ஷூ பழுதடைந்தது. சில நொடிகள் நின்று அதை சரி செய்ய முயற்சி செய்தார் டிரோ.

ஆனால் மற்ற அனைவரும் தன்னை முந்திவிட்டதால் அதற்குமேல் எதுவும் யோசிக்காமல் பழுதடைந்த அந்த ஷூவை கழட்டி வீசிவிட்டு ஒற்றை ஷூவோடு ஓடத் தொடங்கினார் டிரோ.

அதைப் பார்த்த மொத்த அரங்கமும் டிரோவை உற்சாகப்படுத்தியது. சக நாட்டவரைப் போல் கூச்சலிட்டு அந்தப் போராளிக்கு அவர்கள் தங்கள் ஆதரவை அளித்தனர்.

ஒற்றை ஷூவோடு இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியோடும் இன்னும் வேகமாக ஓடினார் டிரோ.

சுமார் அரை மைல் தூரம் ஒற்றை ஷூவோடு ஓடிய டிரோ பலரையும் முந்தி ஏழாம் இடம் பிடித்தார். முதல் மூன்று இடம் பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் டிரோ டிராக்கிலேயே கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார்.

அவரது இந்த முயற்சியைப் பாராட்டி சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் அளித்தனர். பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சாம்பியனுக்குத் தரும் கோஷத்தை டிரோவுக்காக எழுப்பினர்.

தெரியாமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று வீராங்கனைகளின் வாய்ப்பு பறிபோனதால் மேல்முறையீடு செய்யப்பட்டு டிரோ, டிரீகி, ஆயிஷா பிராட் ஆகிய மூவருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு உண்மையான ஒலிம்பியன் தனது போராட்டக் குணத்தைக் கைவிடமாட்டார். தோல்வியைத் துரத்தி தனது கண்ணீருக்கு அர்த்தம் சேர்ப்பார். அப்படியான ஒரு போராளியைத் தான் பிரேசிலின் ஒலிம்பிக் அரங்கம் எடினேஷ் டிரோ வாயிலாக கண்டுகளித்தது.

Previous Post

உலகை உருக வைத்த அழுகை!

Next Post

தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த உசேன் போல்ட்

Next Post
தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த உசேன் போல்ட்

தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த உசேன் போல்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

தொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச

September 17, 2026
சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு அழகிய காதல் ஓவியம்

சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு அழகிய காதல் ஓவியம்

September 17, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

September 16, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை – பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி !

September 16, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

தொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச

September 17, 2026
சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு அழகிய காதல் ஓவியம்

சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு அழகிய காதல் ஓவியம்

September 17, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

September 16, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை – பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை எம்மிடம் கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி !

September 16, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures