தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் களம் இறங்குவது அதிகம் என்றால் பாலிவுட்டில் அப்படியே உல்டாவாக வாரிசு நடிகைகள் தான் அதிக அளவில் களம் இறக்கப்படுகின்றனர். அதில் லேட்டஸ்ட் வரவு தான் சாரா அலிகான். நட்சத்திர தம்பதியான சயிப் அலிகான், அம்ரிதா ஆகியோரின் மகள். இவர் நடித்துள்ள முதல் படமான ‘கேதார்நாத்’ வரும் டிச-7ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதையடுத்து ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துள்ள ‘சிம்பா’ படம் வரும் டிச-28ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஒரே மாதத்தில் தனது இரண்டு படங்கள் வெளியாகவுள்ள இந்த இரட்டிப்பு சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களுக்கு ‘காபி டே’ என்கிற பெயரில் விருந்துகொடுக்க தனது கைப்பட கடிதம் எழுதி அழைப்பு அனுப்பியுள்ளார் சாரா அலிகான்.