கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடைபெற்றது. ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவின்போது யானைகள், குதிரைகள் வரவேற்பு மற்றும் ஊர்வல நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்போது யானைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்தியதாகவும், குதிரைகள் சாட்டைகளால் அடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து பீட்டா அமைப்பினரும், பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்ச்சியில் விலங்களை துன்புறுத்துவதை தவிர்த்திருக்கலாம் என்று தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
அதேபோல் தீபாவளி அன்றுகூட 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பிரியங்கா சோப்ராவின் திருமணத்தின்போது 10 டிரக்குகளில் பட்டாசுகளை கொண்டு வந்து மணிக்கணக்கில் வெடித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.