அமெரிக்காவில், ஒரே கடியில் முதலை ஒன்று தர்பூசணியை கடித்து சுக்குநூறாக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புளோரிடோ மாநிலத்தில் உள்ள முதலை பண்ணையில், ‘பாம்பர்’ என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய முதலை வளர்க்கப்பட்டு வருகிறது.
அண்மையில் அது நீரிலிருந்து கரை நோக்கி வாயை திறந்தபடி வந்தது. இதனை பார்த்த அந்த விலங்கியல் பூங்கா பராமரிப்பாளர் சிறிது தூரத்திலிருந்தபடி, பெரிய அளவிலான தர்பூசணியை முதலையை நோக்கி வீசினார். அதனை லாவகமாக வாயில் கவ்விக்கொண்ட முதலை, சில நொடி பொழுதில் தனது மேல் தாடை உதவியுடன் அதனை சுக்குநூறாக உடைத்துவிட்டு நீருக்குள் சென்றது.
இந்த வீடியோவை முகநூலில் பதிவிட்ட பூங்கா நிர்வாகம், பிற விலங்குகளை காட்டிலும், முதலைகள் எந்தவொரு பொருட்களையும் வலுவான சக்தியுடன் கடித்து நொறுக்கும் திறன்கொண்டது என குறிப்பிட்டிருந்தனர்.