ஐரோப்பா கதிரியக்க விபத்தொன்றை மயிரிழையில் தவிர்த்துக்கொண்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை ரஸ்யா ஆக்கிரமித்துள்ள ஜபோரிஜியாஅணுமின்நிலையம் உக்ரைனின் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதால் ஐரோப்பா கதிர்வீச்சு பேரழிவு ஆபத்தை எதிர்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு மின் இணைப்பு இருந்ததால் ஜபோரிஜியா அணுஉலை மீண்டும் செயற்பட ஆரம்பித்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தீமூண்டதால் மேல்நிலை மின்கம்பிகள் சேதமடைந்தன அணுமின்நிலையம் உக்ரைனின் மின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுநிலையத்திற்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவது குறித்து கரிசனைகள் வெளியாகி வரும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
டீசல் ஜெனரேட்டர்கள் இயங்கவில்லை என்றால் ஆட்டமேசன் மற்றும் எங்கள் அணுஉலையின் ஊழியர்கள் உடனடியாக செயற்படவில்லை என்றால் கதிர்வீச்சின் தாக்கத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாங்கள் காணப்பட்டிருப்போம் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தீப்பிடித்தமையினால் ஏற்பட்ட சேதம் ஆலையை இணைக்கும் மின் கம்பிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள அதிகாரிகள் அதன் வரலாற்றில் முதல் தடவையாக ஜபோரிஜியா தேசிய மின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அணுமின்நிலையம் உள்ள பகுதியில் புதன் கிழமை பாரிய தீ காணப்பட்டதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.