நான் என்னுடைய அரசியல் பயணத்தில் ஹிட்லர், இடியமீன், ரொபேட் முகாபே ஆகியோரைப் பின்பற்றி அவர்களை போல உருவாக வேண்டுமென்ற எண்ணத்தில் எப்போதும் பயணித்ததில்லையென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு உண்மைகளைக் கூறத்தக்க, அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கத்தக்க நிலையிலுள்ள ஊடகவியலாளர்கள் யாரை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்வது என்ற சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியையா அல்லது சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியையா ஸ்தாபிப்பது என்ற முடிவை எடுக்கவேண்டிய தருணம் இதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.