Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுத்து மூல உத்தரவாதத்திலிருந்து பின்வாங்குகிறார் சம்பந்தன்?

December 11, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய முன்னணியுடன் எழுத்துமூல உடன்படிக்கை செய்யப்பட்ட பின்னரே, ஆதரவளிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இதையடுத்தே, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஐ.தே.முன்னணி பிரேரிக்கும் பிரதமரை ஆதரிப்பதாக கையொப்பமிட்டனர்.
கிட்டத்தட்ட அந்த கையெழுத்து, வெற்றுத்தாளில் இடப்பட்ட கையெழுத்தாக அமைந்து விட்டதா என்ற சந்தேகம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலரிடம் ஏற்பட்டு விட்டது. எழுத்துமூல உத்தரவாத நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பின் தலைமை பின்வாங்குவதாக தெரிகிறது. நேற்று நேர்காணல் ஒன்றில் இதை இரா.சம்பந்தன் குறிப்புணர்த்தியுமுள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் இதேவிதமான கருத்தை இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியிருந்தார். “இப்போதைய நிலைமையில், எழுத்துமூல உத்தரவாதம் வாங்குவது ஐ.தே.கவை தோல்வியடைய செய்யலாம்“ என இரா.சம்பந்தன் அந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எம்.பிக்கள் வலியுறுத்தி கேட்ட பின்னரே, “அதை நாங்கள் வாங்கலாம்“ என இரா.சம்பந்தன் சொல்லியிருந்தார். ஆனால், எழுத்துமூல உறுதிமொழி வாங்குவதில்- வாங்கினாலும், அதை எம்.பிக்களிடம் பகிரங்கப்படுத்துவதில்- இரா.சம்பந்தன் விருப்பமுடையவராக தெரியவில்லையென்பது தெரிகிறது.
ஐ.தே.முன்னணிக்கு ஆதரவளிப்பதென கடிதம் வழங்குவதற்கு முன்னதாக கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தனர். அப்போது எழுத்துமூல உத்தரவாதம் வழங்க ரணில் சம்மதித்திருந்தார். இப்போதுள்ள நெருக்கடி நிலைமையில் எப்படியான உத்தரவாதம் கேட்டாலும் அவர் தர தயாராகவே இருக்கிறார். 2019 பெப்பரவரி 4ம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்பின் நகல் வடிவத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்பதும் எழுத்துமூல உத்தரவாதத்தில் ஒரு அம்சம்.
இந்த தகவல் தமிழ்பக்கமும் வெளியிட்டிருந்தது. தமிழ், சிங்கள ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. குறிப்பாக, மஹிந்த ஆதரவு சிங்கள ஊடகங்கள் இதை ஊதிப்பெருப்பித்தன. சுதந்திரதினத்திற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க தமிழீழம் வழங்கப் போகிறார் என விமல் வீரவன்ச கூறித் திரிந்ததும், இதன் பின்னர்தான்.
இப்படியான நிலைமையில், எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை வழங்கினால், ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தோல்வியடைவார் என இரா.சம்பந்தன் கருதுகிறார். அதில் நியாயமும் இருக்கிறது. அரசியலமைப்பு நகல் வடிவத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்ற உத்தரவாதத்தையே, தமிழீழத்திற்கான உத்தரவாதமாக மஹிந்த தரப்பு திரிக்கும் போது, எழுத்துமூல உத்தரவாதம் வழங்கப்பட்டால், ரணில் தமிழீழ சாசனத்தை எழுதிக்கொடுத்து விட்டார் என்றுதான் பிரசாரம் செய்யப்படும். அது நிச்சயம் ஐ.தே.கவிற்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும்.
இந்த நோக்கு நிலையிலிருந்து பார்த்தால், இரா.சம்பந்தன் சிந்திப்பது சரிதான்.
ஆனால், தனியே ஐ.தே.கவை வெல்ல வைப்பது மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலக்கு அல்லவே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் வெல்ல வேண்டும். இலக்குகளும் அடையப்பட வேண்டும்.
ஏற்கனவே, ரணில் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு சமயத்திலும் இப்படியொரு உத்தரவாதம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. இப்போது, மீண்டும் இன்னொரு உத்தரவாதம் வழங்கப்படும் சமயம்.
கூட்டமைப்பு 2015 ஆட்சி மாற்றத்திற்கு முன்னரும் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்தது. நல்லாட்சி அரசை உருவாக்கி, அரசியல் தீர்வு காணப்படுமென்பது அன்றைய கனவான் ஒப்பந்தம். ஐ.தே.கவின் பிரமுகர்களே அதனையும் வழங்கியிருந்தார்கள். ஆனால், மூன்றரை வருடத்தில் இலக்கு எட்டப்படவில்லை. அரசியல் தீர்வு முயற்சியில் எதுவுமே நடக்கவில்லையென்றல்ல. வரைபொன்று தயாராகியுள்ளது. இன்னும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. இந்த அரசின் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் அது நிறைவேறும் சாத்தியமில்லை.
ஆக, ஒன்றேயொன்று நடக்கலாம். அரசியல் தீர்வு வரைபு நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்ப்பால் அது கைவிடப்படலாம். அரசியல் தீர்வை யார் எதிர்க்கிறார்கள் என்பதை செயல்பூர்வமாக நிரூபிக்க ஒரு வாய்ப்பாக மட்டும் இதை பாவிக்கலாம். ஆனால், யார் எதிர்க்கிறார்கள் என்பதை காண்பிக்க, தமிழர்கள் இவ்வளவு காலத்தையும், சக்தியையும் செலவிட வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது.
இத்தனை முறை கனவான் ஒப்பந்தங்களிற்கு நடந்த அனுபவங்களிலிருந்து, இம்முறை எழுத்துமூல உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ளலாமல்லவா?

Previous Post

மனநலம் பாதிக்கப்பட்ட மைத்திரி? அங்கொட மனநல மருத்துவர்கள் பரிசோதிக்க நடவடிக்கை?

Next Post

மேலே உள்ள கடவுளிடம் தான் நாட்டு நிலைமையை கூற வேண்டும்

Next Post

மேலே உள்ள கடவுளிடம் தான் நாட்டு நிலைமையை கூற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures