‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருகின்றாரோ…’, ‘அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராதது ஏனோ’, ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் தக்கதிமிதா’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ ‘அமைதியான நதியினிலே ஓடம்’, ‘ஆசையில பாத்தி கட்டி’, ‘கண்ணுக்கு மை அழகு…’ என இசையில் கசிந்துருகி நம் மனதை கொள்ளை கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸில் இடம் பிடித்த பின்னணி பாடகி பி.சுசீலா.
1960ல் சிவாஜியின் நாடக குழுவுடன் டில்லியில் இருந்து ராணுவ விமானத்தில் ஜலந்தர் போனோம். போர் வீரர்களுக்காக கலைநிகழ்ச்சி நடத்த ஜெயலலிதா, பத்மினி, சாவித்திரி, ஜெமினி கணேசன், ராஜ சுலோச்சனா எல்லாரும் போனோம். நிகழ்ச்சியில முதல் பாட்டு ‘சரவண பொய்கையில் நீராடி’ பாடினேன். அத்தனை ராணுவ வீரர்களும் கைதட்டினாங்க.