இலங்கை கிரிக்கெட் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்றும் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்று விளையாடவுள்ளது.
அந்த தொடருக்கான தற்காலிக பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாம்பவான ஆலன் டொனால்டு (50) நியமிக்கபட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு மட்டுமே இவர் பயிற்சியாளராக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வரும் 9 திகதியிலிருந்து பல்லேகல சர்வதேச மைதானத்தில் தொடங்கும் சிறப்பு பயிற்சியில் டொனால்டு கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களும், பந்து வீச்சு பயிற்சியாளர்களுமான சமிந்தா வாஸ், நுவான் ஜோய்சா, ராமநாயக்கா, ரவீந்தர புஷ்பகுமாரா ஆகியோருக்கும் ஆலன் டொனால்டு சிறப்பு பயிற்சி கொடுப்பார் என தெரிகிறது.
கிரிக்கெட் உலகில் அதிக வேக பந்து வீச்சாளராக விளங்கிய டொனால்டு தான் விளையாடிய 1992 – 2002 காலகட்டத்தில் 72 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 330 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.