உதவிக்கு வந்த இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்: இருவர் அதிரடி கைது

உதவிக்கு வந்த இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்: இருவர் அதிரடி கைது

கனடா நாட்டில் உதவிக்கேட்டு வந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற இரண்டு பேரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ரொறொன்ரோ நகரை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் Spadina என்ற பகுதியில் இருந்த மதுவிடுதிக்கு சென்றுள்ளார்.

விடுதியில் இரண்டு நபர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களிடம் இளம்பெண் உதவி ஒன்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொண்டு இருவரும் அவருக்கு உதவுவதாக கூறி அவர்களில் ஒருவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்றதும் திடீரென இருவரும் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கடுமையாக போராடி அங்கிருந்து தப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் உடனடியாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் விரைவாக தேடுதல் வேட்டையை தொடங்கியபோது 23 மற்றும் 31 வயதான இரண்டு பேரையும் கைது செய்தனர்.

மேலும், இளம்பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது உண்மை தான் என இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இருவரையும் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News