அதிர்ச்சியூட்டும் சம்பவம்! சேமிப்பு கொள்கலனிற்குள் நாயை போல் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் பெண்?
யு.எஸ்.-தென் கரொலினாவில் பெரிய சேமிப்பு கொள்கலன் ஒன்றிற்குள் நாயை போன்று சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்ற பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு மாதங்களாக தான் இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்ததாக இப்பெண் பொலிசாரிடம் தெரிவித்தார். மற்றய பெண்கள் பலர் இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பாரன்பேர்க் கவுன்ரியில் அமைந்துள்ள 180ஏக்கர் நிலப் இப்பகுதி 45-வயதுடைய ரொட் கிறிஸ்ரோபர் கொல்கெப் என்பவருக்கு சொந்தமானது.
வெள்ளிக்கிழமை இப்பகுதியை சோதனையிட்ட அதிகாரிகள் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியான இந்நபரை கைது செய்தனர்.
30-வயதுடைய கலா பிறவுன் என்ற இப்பெண் ஆகஸ்ட் மாத இறுதியில் காணாமல் போய் உள்ளார். இப்பெண் வியாழக்கிழமை கிட்டத்தட்ட 30அடி/15அடி அளவான கொள்கலன் ஒன்றிற்குள் “நாய் ஒன்றை போல் சங்கிலியால்” தன்னை கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
இவரது காதலன் 32-வயதுடைய சார்ளி காவரை இன்னமும் காணவில்லை. இருவரும் ஒன்றாக காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.