இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை இலியானாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இப்போது தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் தனக்கு ஒரு மோசமான பழக்கம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் மிக அதிகமாக சிந்திப்பாராம் அவர். மேலும் பிளெடி எனும் வார்த்தையையும் தான் அதிகம் பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மற்றவர்கள் பேசும் போது, தனது மண்டைக்குள் அவர்கள் பேசுவதில் உள்ள இலக்கண பிழைகளையும் இலியானா திருத்துவாராம். இதெல்லாம் தனது கெட்டப்பழக்கம் என அவர் வெளிப்படுத்தியுள்ளார்.