Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை மின்சாரசபை இவ்வருட இறுதிக்குள் 550 பில்லியன் ரூபா நஷ்டம் | கபிர் ஹசீம்

August 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை மின்சாரசபை இவ்வருட இறுதிக்குள் 550 பில்லியன் ரூபா நஷ்டம் | கபிர் ஹசீம்

இலங்கை மின்சாரசபை இவ்வாண்டின் இறுதியில் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாண்டுக்கான வரி வருமானம் ஒரு பில்லியன் ரூபாவாகவே காணப்படும். வருமானம் ஒரு பில்லியனாக இருக்கும் அதே வேளை , மின்சாரசபை மாத்திரம் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது எனில் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் கேள்வியெழுப்பினார்.

நல்லாட்சியின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , அந்த வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் கபிர் ஹசீம் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 17 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

போலியான இடதுசாரிகளின் தவறான கொள்கைகளின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்பு என்பது அவர்கள் கூறுவதைப் போன்று தவறானதொரு விடயமல்ல.

கிழக்கு ஐரோப்பா, சீனா, சோவியத் இராச்சியம் என்பவற்றின் இடதுசாரி கட்சிகள் அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளன.

மேற்குலக லிபரல் வாதத்தினையோ அல்லது தோல்வியடைந்த இடதுசாரி கொள்கைகளையோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

சமூக வர்த்தக பொருளாதாரத்தினை ஏற்படுத்துவதற்காக நாம் முன்னிற்போம். பொருளாதார மறுசீரமைப்பினை எதிர்ப்பவர்கள் அதற்கான மாற்று திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காணப்படும் கடன் சுமைகளினாலேயே நாடு வங்குரோத்தடைந்துள்ளது. இவ்வாண்டு இறுதியில் அரச நிறுவனங்களின் கடன் சுமைய ஒரு டிரில்லியன் ரூபா வரை உயர்வடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை மின்சாரசபை 50 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இவ்வாண்டு மின்சாரசபையின் நஷ்டம் 550 பில்லியன் ரூபா வரை உயர்வடையக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கும் சமூர்த்தி கொடுப்பனவிற்காக 50 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்படுகிறது. மின்சாரசபை நஷ்டத்தை எதிர்கொள்ளவில்லை எனில் , அந்த பணத்தைக் கொண்டு 11 சந்தர்ப்பங்களில் சமூர்த்தி கொடுப்பனவை வழங்க முடியும்.

இவ்வாண்டின் இறுதியில் வரி வருமானம் ஒரு பில்லியன் ரூபாவாக காணப்படும். வருமானம் ஒரு பில்லியனாக இருக்கும் அதே வேளை , மின்சார சபை மாத்திரம் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது எனில் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது? கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 345 பில்லியன் ரூபா நஷ்டமடைந்துள்ளது.

நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு 845 பில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

வருமானம் ஒரு பில்லியனாகக் காணப்படும் போது அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்குவது ? பொருளாதார மறுசீரமைப்பிற்கு முதலில் செய்ய வேண்டிய ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். மறுசீரமைப்புக்கள் அரசியல் பொறிமுறைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பொதுஜன பெரமுன இந்த மறுசீரமைப்புக்களுக்கு நேரடியாக ஒத்துழைப்ப வழங்குமா?

நல்லாட்சி அரசாங்கத்தின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , அந்த வழக்குகளிலிருந்து தொழிநுட்ப காரணிகளால் விடுதலை பெற்றுள்ளவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இவ்வாறு சில வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளவர்களில் சிலரை தூக்கிலிட வேண்டும். அவர்களுக்கு நஷ்டஈடு வேண்டுமெனில் அதனை அவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். அது அமைச்சரவையின் ஊடாக வழங்கப்படக் கூடாது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இது தேவையற்றதொரு விடயமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் எனக் கூறுபவர்களை கடலில் எரிய வேண்டும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

கடந்த 2008 ஆம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியிலிலேயே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அதிகளவான கடன் பெறப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் வாசுதேவ அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்தார்.

அவ்வாறெனில் அவர் அந்த சந்தர்ப்பத்தில் தனது பதவியை இராஜிநாமா செய்திருக்க வேண்டும். அவர் தற்போது ஆடை அணிந்து கொண்டு தான் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றாரா? உண்மையில் தற்போது அவரையே கடலில் எரிய வேண்டும்.

தற்போது மத்திய வங்கியின் ஒரு சில தீர்மானங்களினால் ஓரளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு பேணப்பட்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ளும் வரை இந்த நிலைமையை பேண வேண்டும். அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாது , எம்மால் முறையான பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்வைக்க முடியும் என்றார்.

Previous Post

10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும் | சம்பிக்க

Next Post

ஜனாதிபதி ரணில் | பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று

Next Post
ஜனாதிபதி ரணில் | பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் | பஷில் ராஜபக்ஷ சந்திப்பு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures