இலங்கையில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.இலங்கையில் போருக்கு பின் மேற்கொள்ளும் நலத்திட்டங்களில் இந்தியா பெரும் உதவி புரிந்து வருகிறது வீடுகளை இழந்த தமிழர்கள், தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கு இந்திய அரசு 35 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,486 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது.
இதுவரை இந்தியா வெளிநாடுகளுக்கு அளித்த உதவித் தொகையில் இலங்கைக்கு அளித்த உதவித் தொகையே மிக அதிகமானது.
இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் 63 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதுவரை 47 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இலங்கை ஹட்டன் மாவட்டத்திலுள்ள பொகவந்தலாவை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட 155 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவு அளித்து வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி’ என்றார். இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் வாழ்த்து தெரிவித்தார்