புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு ரஜினி, கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப் படையினர் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 12 இடங்களில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைமையிடம் உட்பட அனைத்து முகாம்களும் அழிக்கப்பட்டன.
இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரும் இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
அந்தவகையில், இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ‘BRAVO INDIA’ என்ற இரண்டே இரண்டு வார்த்தைகளை மட்டும் பதிவு செய்து அதன் அருகில் இந்திய தேசிய கொடி படத்தையும் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.