Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை – இந்தியவுக்கு இடையிலான டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

February 24, 2022
in News, Sports
0
இலங்கை – இந்தியவுக்கு இடையிலான டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடருக்கு நான்கு நாட்களுக்குள் இலங்கை இன்று மீண்டும் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் முதல் ஆட்டம் லக்னோவில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

கடந்த தொடரில் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், இறுதிப் போட்யில் வெற்றிக்கு திரும்பியமையும், உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றமையும், இன்றைய போட்டியில் அணியின் உறுதிப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எனினும் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் மூன்று முக்கிய வீரர்களை இழந்தது போட்டியின் ஆரமபத்திலேயே இலங்கை அணி எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்த முக்கிய வீரர்களின் முன்னணயில் வனிந்து ஹசரங்க உள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த வனிந்து, அவுஸ்திலேியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையிலும் பாதகமான முடிவினை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக இலங்கை அணியுடன் இந்தியா செல்லும் வாய்ப்பை இழந்தார். அதனால் இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் இழக்க நேரிட்டுள்ளது.

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணித் தலைவர் தசுன் ஷாக்க, எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவரால் விளையாட முடிந்தால், அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து அணியில் இணைவார் என்பதே எங்களது நம்பிக்கை என்றார்.

வனிந்து ஹசரங்கவை தவிர அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்ட நாயகனாகத் தெரிவான குசல் மெண்டிஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் சிறு காயம் காரணமாக இன்றைய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ள போட்டியில் இலங்கை அணியின் வெற்றியே இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

ஏனெனில் சர்வதேச டி:20 நாடுகளின் தரவரிசையில் இலங்கை அணி மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால், தரவரிசையில் சரிவை சிரமமின்றி தடுக்க வாய்ப்புள்ளது.

இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்திய போதிலும், அவர்களின் முக்கிய நட்சத்திரங்களான விராட் கோஹ்லி, ரிஷப் பந்த் மற்றும் ஷர்தால் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் த.தே.கூ.வினரின் போராட்டம் திட்டமிடப்பட்ட சதி | ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Next Post

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

Next Post
முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures