இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ‘பலவான்களின் சமர்’ என அழைக்கப்படும் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி கொழும்பு 7இல் அமைந்துள்ள என்.சி.சி. (N.C.C.) மைதானத்தில் இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் 11ஆவது தடவையாக நடத்தப்படும் இப்போட்டியில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அச்சக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 மகளிர் அணிகளும் 52 ஆடவர் அணிகளும் பங்குபற்றுகின்றன.
இந்தப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 100,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசும், 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 50,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் ஆகியோருக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
இந்த Printers Sixes 2024 மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு Advanced Printing Technologies, Colorchroma, Flexiprint & Print USA, JDC Printing Technologies, KWO Printing Needs, Print Care, Sitara Ltd ஆகியன அனுசரணைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.