இலங்கையில் ஆசிய கிண்ண போட்டிகள்
19 வயதுக்குட்பட்டோருகான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் 18 ஆம் திகதி இலங்கையில் உள்ள கொழும்புவில் தொடங்கவுள்ளது.
இலங்கை, இந்தியா உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் 19 வயதுகுட்பட்டோருகான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்து அதே மாதம் 23ஆம் திகதி முடிகிறது.
இதில் பங்கேற்கும் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் – ஏ பிரிவில் இலங்கை, இந்தியா, நேபாளம், மற்றும் மலேசியா அணிகளும் குரூப் – பி பிரிவில் பாகிஸ்தான், வங்காளதேசம், அப்கானிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த வகையான ஆசிய போட்டிகள் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.