அனல் பறந்த மூன்றாவது டெஸ்ட்…கோஹ்லியை மிரளவைத்த இங்கிலாந்து வீரர்: வெற்றி வாகை சூடிய இந்திய அணி!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 417 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 283 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் ஆனது.
இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. முதல் இன்னிங்ஸில் அசத்திய இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களான மூம்மூர்த்திகள் இரண்டாவது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணியை ஒரு வழி பார்த்துள்ளனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ரூட் 78 ஓட்டங்களும், ஹமீது 59 ஓட்டங்களும் குவித்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 104 ஓட்டங்கள் நிர்ணயித்தது.
இந்திய அணி தரப்பில் மூம்மூர்த்திகளான ஜடேஜா, யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதைத் தொடர்ந்த் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரரான பார்த்தீவ் பட்டேலின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
மேலும் இப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கும், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு இடையேயான ஆட்டம் அனல் பறந்ததால், கோஹ்லி சற்று ஆக்ரோசமாகவே செயல்பட்டார். இதே முறையை இங்கிலாந்து வீரர்களும் செயல்படுத்தியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.
இது குறித்து கோஹ்லி கூறுகையில், இங்கிலாந்து வீரர் ஹமீது ஆட்டம் தன்னை வியக்க வைத்ததாகவும், அவரின் ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சியை தான் கண்டதாகவும், அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் சிறந்த வீரராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.