உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மற்று மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தின் பின்னர் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் அத்திட்டங்கள் பாராளுமன்றத்தில் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளன.
நேற்றிரவு (28) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவை தோல்விடையச் செய்யப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதற்கு எதிராக 38 வாக்குகளும் ஆதரவாக 20 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
நகர அபிவிருத்தி அமைச்சின் மீதான விவாதத்தின் பின்னர் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்கெடுப்பு நடாத்தும் போது சபையில் அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் காணப்படாமை அரசாங்கத்திற்கு வாக்குகள் கிடைக்கப் பெறாமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

