இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழப்பவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள் என தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதேவேளை, வருடத்திற்கு 48,000 பேர் மரணிக்கின்றனர். இவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு முடியும். புகையிலைப் பாவனை மற்றும் மது பாவனையே இருதய நோய்க்கான பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், கொலஸ்ட்ரோல் அதிகரிப்பும் இருதய நோயாளர்களைப் பாதிக்கின்றது என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.