ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுவதாகவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை விசேட தினமாக பிரகடனம் செய்து தபால் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இக்காலப் பகுதிக்குள் வீட்டில் உள்ள நாய்களை கட்டி வைக்குமாறும் தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.