பத்து வருடங்களுக்கு முன்பு வாமனன் என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியா ஆனந்த் இவ்வளவு காலம் தமிழ் சினிமாவில் தாக்குப்பிடித்து இருக்கிறார் என்பதே மிகப்பெரிய சாதனைதான். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறங்குமுகத்தில் இருந்த பிரியா ஆனந்திற்கு கடந்த வருடம் நிவின்பாலி ஜோடியாக மலையாளத்தில் நடித்த காயம்குளம் கொச்சுன்னி படம் கொஞ்சம் பிரேக் தந்தது
அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் திலீப் நடித்துள்ள கோடதி சமக்சம் பாலன் வக்கீல் என்கிற படத்தில் பிரியா ஆனந்த். இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. மேலும் பிரியா ஆனந்த் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள எல்.கே.ஜி படமும் நேற்று வெளியாகியுள்ளது.. இந்த இரண்டு படங்களுமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார் பிரியா ஆனந்த்.
அதேசமயம் திலீப் பட புரமோஷன்களில் பிரியா ஆனந்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.