ஹிந்தித் திரையுலகத்தில் சர்ச்சை நடிகை எனப் பெயரெடுத்தவர் கங்கனா ரனவத். அவரது கூட்டு இயக்கத்தில் வெளிவந்த ‘மணிகர்ணிகா’ படம் நல்ல விமர்சனத்தையும், 100 கோடி வசூலையும் பெற்றது. தன் படத்திற்கு வேறு எந்த ஒரு ஹிந்தி நட்சத்திரங்களும் ஆதரவாகப் பேசி பிரமோஷன் செய்யவில்லை என்று கங்கனா குற்றம் சாட்டியிருந்தார். சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் படத்தை எடுத்ததற்குக் கூட பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தரவில்லை என்று கண்டித்திருந்தார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ‘மணிகர்ணிகா’ படத்தில் கங்கனா குதிரை மீது அமர்ந்து சண்டை செய்யும் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது. அதில் மோட்டார் மூலம் ஓடும் குதிரை பொம்மை மீது கங்கனா அமர்ந்து நடித்ததைப் பார்த்து பலரும் கிண்டலடித்தார்கள். இந்தப் படத்திற்காக கங்கனா நிஜமாகவே குதிரையேற்றப் பயிற்சி பெற்று சண்டையிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அது உண்மையில்லை, என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வந்ததும் ‘டிரோல்’ செய்வது அதிகமானது.
அதற்கு கங்கனாவின் சகோதரி ரங்கோலி கிண்டலடித்தவர்களை ‘முட்டாள்தனமானவர்கள் டெக்னாலஜியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். முட்டாள்கள். குளோசப் காட்சிகளை இப்படித்தான் படமாக்குவார்கள். இது மெக்கானிக்கல் குதிரை. ‘கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், பிரேவ் ஹார்ட்’ போன்ற படங்கள் இப்படித்தான் எடுக்கப்பட்டன. முட்டாள்கள்” என விமர்சித்திருக்கிறார்.
ரங்கோலியின் இந்த விமர்சனத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன