‘பெப்சிகோ’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள இந்தியர், இந்திரா நுாயிக்கு, இந்த ஆண்டுக்கான, ‘ஆசியா கேம் சேஞ்சர்’ விருது வழங்கப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஆசியா கலாசார மையம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில், உலகளவில், தடைகளை உடைத்து, தைரியத்துடன், சாதனை படைக்கும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு, ‘ஆசியா கேம் சேஞ்சர்’ விருது வழங்குகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளசென்னையை சேர்ந்த, இந்திரா நுாயி, 62, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மனித நேயமிக்க தலைமை, தொழில் சாதனை மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து, உணவு, ஊட்டச்சத்து, தண்ணீர், காலநிலை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விவகாரங்களில் பணியாற்றியதற்காக, இந்திரா நுாயிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.