விசேடமாக மக்களுக்கு எதிரான பிரேரணைகள் எதுவும் காணப்படாது போனால் அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்காக கட்சி பேதம் மறந்து இந்த ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.