ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயகுமார். அடுத்து ஆர்யா நடித்த கஜினிகாந்த் படத்தை இயக்கினார். இதற்கிடையில் தமிழில் மேலும் இரண்டு படங்களை இயக்கினார்.
அது முடங்கி உள்ளது. இது அடல்ட் வகை படம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தன்னுடைய பெயரை சான்டி என்று மாற்றிக்கொண்டு கவுதம் கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அந்தப்படம் பூஜைபோட்டதோடு சரி, அதன்பிறகு ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் அடுத்தப்படியாக பல படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா எண்டர்டெயின்ட்மென்ட் மதியழகனிடம் ஒரு கதை சொன்னார். அவருக்கு கதை பிடித்துப்போக, அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் பூஜை நடந்தது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சந்தோஷ் பி.ஜெயகுமாரின் வழக்கான ஆபாச பார்முலாவிலிருந்து மாறுபட்டு டிடெக்டிவ் த்ரில்லர் ரக படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.