அயோக்யா படத்திற்கு பின் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு ஆகியோரோடு ‛ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். தீவிரவாதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த ஆக்ஷன் படம், துருக்கியில் படமாக்கப்பட்டு வருகிறது.
வேதாளம் மற்றும் றெக்க ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபிர் துகான் சிங், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலானவை துருக்கியில் படமாக்கப்பட்டன.
இதையடுத்து, விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி, விக்ரம் நடித்த இருமுகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க விஷால் ஒப்புக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருக்கிறது.