ஆஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்ட விரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் இன்று காலை அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 15 இலங்கையர்கள் அங்கிருந்து சிறப்பு வானூர்தி மூலம் இன்று காலை 6.20 மணியளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சுவிற்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்கள் காலை 9 மணியளவில் வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் சிங்கள மற்றும் தமிழர்கள் இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாடுகடத்தப்பட்டுள்ள இலங்கையர்களை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், அறிக்கையை பதிவு செய்த பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.