அரசாங்கத்தின் அடுத்த கட்ட முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) நண்பகல் 12.00 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இன்றைய சந்திப்பு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் மேற்கொண்ட விசேட கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றுள்ளது.