Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

December 28, 2017
in News, Politics
0
அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

கடந்த வாரம் யாழில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் அமைச்சர் றிஷாட் அரசியல்ப் பேசி விட்டார் என புலம்பித்திரிகின்றார் அய்யூப் அஸ்மின். யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி திரைசேரிக்கு அனுப்பப்படுவதையும் வேதனையோடு நினைவு கூர்ந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன், தற்போது யாழில் குடியேறியுள்ள மக்களுக்குரிய வீடுகளை அமைக்க 2018 இல் நிதியை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான காணிப்பிரச்சினைகளை தீர்க்க தமிழ்த் தலைமைகளுக்கு சபாநாயகர், முஸ்லிம் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இருந்த கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பகிரங்க அழைப்புவிடுத்ததை பிழை என்று விமர்சித்திருப்பது அய்யூப் அஸ்மின் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிரானவர் என்பதை நிரூபனமாகிவிட்டது.

அஸ்மின் கூறியிருக்கும் கருத்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் அரசியல் வியாபாரத்துக்காக இனவாத்ததைத் தூண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் எந்தத் தடையும் செய்யவில்லை என்று அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எங்கெல்லாம் தடுத்தார்கள் என்று அய்யூப் அஸ்மினுக்கு தெரியாது போல் நடிக்கின்றாரா? அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் ஏதாவது பெறுவதற்காக இவ்வாறு பொய் பேசுகின்றாரா என்று தெரியவில்லை
வவுனியா சாளம்பைக்குளம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு சொல்லொனாத் துன்பங்களையும் அநியாயங்களையும் செய்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

முல்லைத்தீவில் 27 வருடமாக அகதிகளாக இருந்த மக்கள் தங்களது சொந்த பூமிக்கு மீளக்குடியமரச் செல்லும் போது அதற்கு எதிராக தமிழ் மக்களை திரட்டி இனவாதத்தை தூண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்றும் அந்த மக்கள் அகதி வாழ்வு வாழ்கின்றார்களே இதற்கு யார் காரணம்?

மன்னார் சன்னாரில் முஸ்லிம்கள் தங்களது பூர்வீக பூமியில் குடியேறும்போது அதற்கும் எதிர்ப்பை வெளியிட்டு தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்தியவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

முசலியில் மீள்குடியேறிய மக்கள் தொழில் இன்றி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்த போது அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் கைத்தொழில் அமைச்சின் மூலம் பல்லாயிரம் பேருக்கு தொழில் கிடைக்கும் வகையில் கைத்தொழில் பேட்டையை அமைக்க நடவடிக்கை எடுத்த போது அதனை தடுத்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

வவுனியாவில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதற்கு அமைச்சர் றிஷாட் தமிழர்களுக்கு வந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்கிவிட்டார் என வவுனியாவிலும், செட்டிகுளத்திலும் அமைச்சர் றிஷாதின் கொடும்பாவியை எரித்து இந்தியன் உயர்ஸ்தானிகத்துக்கும் பிழையான தகவல்களை வழங்கியவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

தமிழ் மக்களுக்கு எந்த தவறும் செய்யாத முஸ்லிம் மக்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்த கொடுமை எண்ணிலடங்காதவை.

இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க வக்கற்ற முஸ்லிம் தலைமைகளில் அமைச்சர் றிஷாட் மாத்திரமே தைரியமாக பேசி இன்றுவரை முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து இன்றும் போராடிக்கொண்டிருப்பவரும் என்பதே நிதர்தனம்.

இவ்வளவு கொடுமைகளை செய்தபோது நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினராக வாய் மூடி மௌனியாக இருந்தீர்களே? இதை தட்டிக்கேட்க வக்கற்ற நீங்கள் அமைச்சர் றிஷாட் மீது விரல் நீட்டுவது கேவலமானதும் வெட்கக்கேடானதுமாகும்.

நீங்கள் மாகாணசபை உறுப்பினராக இருந்து முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன? நீங்கள் செய்த அபிவிருத்தி என்ன பகிரங்கமாக வெளியிட உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

உங்களுக்கு அமானிதமாக வழங்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் பதவியை உங்களது கட்சி திருப்பி கேட்கும் போது வழங்க மறுத்த நீங்கள் ஒரு உண்மையான ஆலிமா? கட்சி திருப்பி கேட்கும் போது பதவியை திருப்பி தருவேன் என்று வாக்குறுதியளித்த நீங்கள் செய்தது துரோகமில்லையா?

அமைச்சர் றிஷாட் யாழ் முஸ்லிம்களின் வீடுகளை கட்ட உரிய காணிகளை வழங்கவில்லை என்றும் அதற்காக ஒதுக்கிய நிதி மீண்டும் திரைசேரிக்கு அனுப்பப்படுவதை வேதனையோடு குறிப்பிட்டது உங்களது பார்வையில் இனவாதமா? அமைச்சர் றிஷாட் பேசியது அவரது சொந்தப்பிரச்சினைக்காக அல்ல வடக்கு முஸ்லிம்களின் சுதந்திரமான மீள்குடியேற்றத்துக்கே என்பதை முஸ்லிம்கள் புரிந்து விட்டார்கள்.

Previous Post

தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது- ஜனாதிபதி

Next Post

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்

Next Post
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 25, 2026
செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

July 25, 2026
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

மகிந்த மகன் யோஷிதவின் பணமோசடி வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 25, 2026
செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

செப்டம்பரில் வெளியாகும் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’

July 25, 2026
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் முதலாவது போட்டியாளர் யாழிந்திக்கு ஏமாற்றம்

July 24, 2026
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கடல் வழியாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது

July 24, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures