மருத்துவமனையில் நோயாளியை உயிருடன் கொளுத்திய நபர்! பதற வைக்கும் வீடியோ
அல்பேனியா நாட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நோயாளியை ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேனியா தலைநகர் டிரானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், டயாலிஸில் வார்டில் 4 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். மருத்துவர் அவர்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது உள்ளே இருந்த ஒரு நபர் தனது பையில் இருந்து பெட்ரோல் நிரம்பிய கேனை எடுத்து ஒரு நோயாளியின் மீது ஊற்றி தீ வைக்க முற்பட்டார்.
சுதாரித்துக் கொண்ட அந்த நோயாளி அவரை கீழே தள்ளிவிட்டார். இருப்பினும் அந்த நபர் தீயை கொளுத்த டயாலிஸில் வார்டில் மளமளவென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.
இந்த சம்பவத்தில் அந்த அறையில் இருந்த 3 பேர் பலியாகினர். தீயிட்ட நபரும் உடல் கருகி பலியாகினார்.
பயங்கர தீக்காயங்களுடன் தப்பிய 38 வயதான அந்த நோயாளி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்த போது மருத்துவமனையின் டயாலிஸில் வார்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.