ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றிக்காக நடாத்தப்படவுள்ள முதலாவது பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இக்கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமை தாங்கவுள்ளார். அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சகலரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள் மாவட்டத்துக்கு இரண்டு வீதம் நடாத்துவதற்கு இக்கூட்டணி தீர்மானித்துள்ளது. இதுதவிர, தொகுதி வாரியாகவும் பல கூட்டங்களை கூட்டணி ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட மட்டக் கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.