Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

IOC விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு முதலாவது இலங்கையராகத் தெரிவானார் நிலூக்க கருணாரட்ன

August 9, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
IOC விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு முதலாவது இலங்கையராகத் தெரிவானார் நிலூக்க கருணாரட்ன

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பாட்மின்டன் வீரர் நிலூக்க கருணாரட்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின்  விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரர் நிலூக்க கருணாரட்ன ஆவார்.

‘விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதலாவது நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது’ என பாரிஸ் ஒலிம்பிக் நகரிலிருந்து நிலூக்க கருணாரட்ன தெரிவித்தார்.

நிலூக்க கருணாரட்ன 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன் 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் (2012, 2016, 2020) பங்குபற்றியவராவர். அத்துடன் பல்வேறு சர்வதேச பட்மின்டன் போட்டிகளில் வெற்றிகளையும் ஈட்டியவராவார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீர, வீராங்கனைகளால் IOC ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

வாக்களிப்பின் மூலம் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் பேரவை விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிறிஸ்பேனில் 2032இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவரை 8 வருடங்களுக்கு செயற்படும்.

ஒலிம்பிக் அமைப்பின் முக்கிய முடிவுகளில் விளையாட்டு வீரர்களின் குரல் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்த புதிய உறுப்பினர்கள் பங்களிக்கவுள்ளனர்.

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இக் குழுவில் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சம்பியன் அலிசன் பீலிக்ஸ், ஜேர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கிம் பியூ, அவுஸ்ரேலியாவின் படகோட்ட வீராங்கனனை ஜெசிக்கா பொக்ஸ், நியூஸிலாந்தின் டென்னிஸ் வீரர் மார்க்கஸ் டெனியல் ஆகியோர் முக்கிய நான்கு உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். இக் குழுவில் மொத்தமாக 29 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்.

Previous Post

அமெரிக்க, இலங்கை, மாலைதீவு கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு

Next Post

அஜித் குமார் நடிக்கும் ‘விடா முயற்சி’ பட அப்டேட்

Next Post
அஜித் குமாரின் ‘விடா முயற்சி’ அப்டேட்

அஜித் குமார் நடிக்கும் 'விடா முயற்சி' பட அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures