பொலன்னறுவை வெஹர நிகபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை கொட்டும் மழைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
எழுச்சிபெறும் பொலன்னறுவை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் 9.52 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தனக்குரிய குடையை ஜனாதிபதி தானாகவே பிடித்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.