Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் இன்று திறப்பு

September 16, 2019
in News, Politics, World
0

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இத்திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிட இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  இதில், 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி,  50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் என்பவற்றுக்கான வசதிகள் அமையப்பெற்றுள்ளன.

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களுக்கு எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியவாறு தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும்.

இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும். உலகில் 18 ஆவது உயர்ந்த கோபுரமாக இது காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ஈசி என்ரர் டைநிங் நைட் பதிவுகள்

Next Post

ஹங்வெல்ல, அம்புல்கம சந்தியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

Next Post

ஹங்வெல்ல, அம்புல்கம சந்தியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures