Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

July 13, 2016
in News, Politics
0
இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு புகலிடம் வழங்க கடுமையான கட்டுப்பாடுகள்: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு புகலிடம் வழங்க இனிமேல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அலுவலகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகமான SEM சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘இலங்கை குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சுவிஸில் புதிதாக புகலிடம் வழங்குவதில் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகள் தற்போது ஓரளவிற்கு சீரடைந்துள்ளது என சுவிஸ் அரசு நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

’’தற்போது இலங்கையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. குறிப்பாக, கருத்து சுதந்திரம், பொது இடங்களில் கூடுவது உள்ளிட்ட மனித உரிமைகள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் இலங்கையில் இருந்து புகலிடம் கோரி வரும் அந்நாட்டு குடிமக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிப்பதற்கு கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தமிழர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளும் தற்போது குறைந்து வருகிறது.

எனினும், மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்களில் முன்னேற்றம் இல்லை என்பதால், தமிழர்களுக்கு புகலிடம் வழங்கும்போது தனிக்கவனம் செலுத்தப்படும்.

நடப்பாண்டு மே மாதம் இறுதி வரை 5,000 இலங்கை குடிமக்கள் சுவிஸில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3,674 நபர்களுக்கு அகதி அந்தஸ்த்துடன் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

1,316 நபர்களின் புகலிடக் கோரிக்கை மனுக்கள் தற்போது நிலுவையில் உள்ளன. மேலும், 1,613 நபர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், இவர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழலில் உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கான சுவிஸ் கவுன்சிலின் துணை தலைவரான Anna Annor என்பவர் 47 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’’இலங்கை நாட்டிற்கு திரும்பிச் செல்லும் தமிழர்கள் அனைவரையும் ‘தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு’ ஆதரவானவர்கள் என அந்நாட்டு அரசு முடிவு செய்கிறது.

இதன் விளைவாக, கொழும்பு விமான நிலையத்திலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறையிலும் அடைக்கப்படுகிறார்கள்.

2009ம் ஆண்டு யுத்தத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களில் பலரை அந்நாட்டு அரசு இதுவரை விடுதலை செய்யவில்லை.

எனினும், கடந்த 2014ம் ஆண்டு முதல் இலங்கை நாட்டில் சூழல்கள் மாறியுள்ளன. கடந்த ஜனவரி முதல் பெப்ரவரி வரை இலங்கை நாட்டிற்கு திரும்பியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சுவிஸில் புகலிடம் கோரும் இலங்கை குடிமக்கள் மீது கடுமையான நிபந்தனைகள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: Featured
Previous Post

14 வயது தமிழனின் அபார கண்டுபிடிப்பு

Next Post

மைத்திரி – ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

Next Post
மைத்திரி – ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

மைத்திரி - ரணிலின் அரசியல் நாடகம்! உயிர்பெற்ற ராஜபக்ஷ ரெஜிமென்ட்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures