Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அதிரடிக்கருத்து

June 7, 2019
in News, Politics, World
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்குமாறு ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாக கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் மூன்றாவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது பொலிஸ் மா அதிபர் பூஜித் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்து இரவு 8 மணிக்கு சந்திக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எந்த விசாரணைக்குழுவிடம் சென்றாலும் நான் குற்றவாளியாவேன் என்றும் ஓய்வூதியம் இன்றி வீடு செல்கின்றீர்களா அல்லது தவறை ஏற்றுக்கொண்டு பதவி விலகுகிறீர்களா என ஜனாதிபதி தன்னிடம் கேட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி இதனை மிகவும் தயவுடன் கூறியதாகவும் சுமார் நான்கு முறை இது பற்றி வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது தன்னிடம் இருந்த ஆவணங்களை ஜனாதிபதிக்கு காண்பித்ததாகவும் அவற்றை ஜனாதிபதி மிகவும் உன்னிப்பாக பார்த்ததாகவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தனது 35 ஆண்டுகால பொலிஸ் சேவையில் தனது பெயரை கெடுத்துக்கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நான் திருடன் இல்லை எனவும் கொள்ளைக்காரன் இல்லை எனவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தான் பொலிஸ் துறையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி அழைப்பொன்றை விடுத்து பதவி விலகல் கடிதத்தை வழங்காதது தொடர்பில் கோபமாக விசாரித்ததாகவும் தன்னை 29ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்புவதாக தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரை காட்டிக்கொடுக்க முடியாத காரணத்தால் தான் பதவி விலகவில்லை என தெரிவித்த பொலிஸ் மா அதிபர், ஈஸ்டர் தாக்குதலை பொறுப்பேற்று பதவி விலகினால் அரசாங்கத்தில் உயர் பதவியோ தூதுவர் பதவியோ வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

Previous Post

நீர்வளத்தை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும்- நடிகர் விவேக்

Next Post

ஜனாதிபதிக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்!

Next Post

ஜனாதிபதிக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச்சாட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures