மாகந்துரே மதூஸ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் மற்றும் இருவர் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலை 4.55 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
48 வயதுடைய மொஹமட் சியாம் மற்றும் 40 வயதுடைய லங்கா சஜித பெரேரா எனும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் தற்பொழுது விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரிவில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெறப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

