இலங்கை வரலாற்றில், மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளானவன் தான் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தப் பழிவாங்கலால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துச் சலுகைகளையும் தான் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புச் சலுகைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில், சபையில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் மோசமான அரசியல் பழிவாங்கல்களுக்குள் உள்வாங்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புச் சலுகைகள், ஏனைய கொடுப்பனவுகள், வாகனக் கொடுப்பனவு, உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை இழந்ததாகவும், இத்தகைய செயற்பாடுகளால் சிறப்புச் சலுகைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பில் ஆராய்ந்து, தனக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து சிறப்புச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

