முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இரண்டு வார கால சுற்றுலாவுக்காக எமிரேட்ஸ் விமான சேவை மூலம் அவர் நேற்று அமெரிக்கா சென்றதாக கோத்தாபய ராஜபக்ஷவின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப அங்கத்தவர்களுடன் இரண்டு வாரம் தங்கியிருக்க அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் எதிர்வரும் மாதம் 12ம் திகதி நாடு திரும்புவார் எனவும் அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவார் என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

