கத்திச்சண்டை படத்தில் இணைந்த விஷால் – தமன்னா ஜோடி மீண்டும் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள். தற்போது விஷால் நடித்து வரும் அயோக்யா பட வேலைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடைபெறுகிறது. துருக்கியில் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்புகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

